Tuesday, January 13, 2009

புத்தகம் பற்றி...

ஒளரங்கசீப் மிகவும் பொல்லாதவர், தன் தந்தையையே சிறை வைத்தவர், மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்லிக் தந்திருக்கிறது. அவரது உண்மை முகமே வேறு!

தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்.

இளம் வயதில் தந்தை ஷாஜஹானால் எக்காரணத்தினாலோ மிகவும் புறக்கணிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். அதுவே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே ஒரு பெரிய பிளவை உண்டாக்கிவிட்டது.

தந்தையையும் சகோதரர்களையும் வென்று டெல்லி அரியணையைக் கைப்பற்றி, மாபெரும் சக்ரவர்த்தியான ஒளரங்கசீப்பின் வாழ்வில் தான் எத்தனை சுவாரசியமான திருப்பங்கள்!

இந்நூலைப் படித்தபின் ஒளரஙகசீப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் முற்றிலும் மாறி இருக்கும் என்பது நிச்சயம்.

நன்றி: ஆசிரியருக்கு மற்றும் இந்த புத்தக வெளியீட்டாளர்களுக்கும்.

No comments: